tamilnadu

img

கடலூரில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

கடலூர், ஜன. 13- பொங்கல் விழாவின்போது, வீட்டின் முன்பு மண் பானையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து, வைத்தும், இரண்டாம் நாளாக மாட்டுப் பொங்கல் வைத்தும் கொண்டாடுவது வழக்கம். அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர். ஒரு ஜோடி கரும்பு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையானது. 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. மஞ்சள் கொத்து ரூ.20 முதல் விற்பனையானது. மேலும், மண்பானை, அடுப்பு வியாபாரமும் நடைபெற்றதோடு, காய்கறி, பழங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. காய்கறிகளைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்களாக விற்பனையான விலையை விட சற்று குறைந்து, தக்காளி கிலொ ரூ.28, உருளை ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.32-40, கத்தரிக்காய் ரூ.40-60, தேங்காய் ரூ.20 வரை விற்பனையானது. மேலும், இனிப்புகள், வீடுகளுக்குத் தேவையான பாத்திரம், மளிகை சாமான்கள், அத்தியாவசியப் பொருட்கள், துணிகள் வாங்குவதற்காகவும் பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.