tamilnadu

img

நிலம், வீடு கோரிக்கை : ஆகஸ்ட் 1இல் போராட்டம்

ஈரோடு, ஜூலை 09-  நிலம், வேலை, சமூகப்பாது காப்புக்கோரி ஆகஸ்ட் 1ல் நடை பெறும் போராட்டத்தை தமிழகத்தில் வலிமையாக நடத்த வேண்டுமென விதொச அகில இந்தியப் பொதுச் செயலாளர் வெங்கட்  அழைப்பு விடுத்துள்ளார்.  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட சிறப்புப் பேரவை கூட்டம் கோபியில் நடைபெற்றது. நிலம், வேலை, கூலி,  சமூகப்பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற இக்கூட்டத்திற்கு விதொச ஈரோடு மாவட்டத்தலைவர் ஆர்.விஜய ராகவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.ஆர்.மாணிக்கம் வரவேற்றார். இதில், அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.வெங்கட், மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் ஏ.பழனிசாமி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.   இதில் பங்கேற்று விதொச அகில இந்தியப் பொதுச் செயலாளர் வெங்கட் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் விவசாய இயக்கத்தைக் கட்டியமைத்த பி.சீனிவாசராவ், கோபி வந்துள்ளார். விவசாயத் தொழிலாளர்கள்  பெரும்பாலும் கிரா மப்புற தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத் தப்பட்ட மக்களாகவே உள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் அரசின் சமூக நலத் திட்டங்களை, அரசியல் பொருளாதார நிலைகளை, மானியங்க ளை எதிர்பார்த்துள்ளனர். 

அரசின் உதவிகளை இவர்கள் எதிர்பார்ப்பதால் விவசாயத் தொழிலா ளர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்களல்ல. கொரோனா பெருந்தொற்றிற்கு முன்பு  உணவு தானிய உற்பத்தி 20.8 கோடி மெட்ரிக் டன்னாக இருந்தது, பின்னர் 29.0 கோடி மெட்ரிக் டன்னாக உயர்ந்தது.  உற்பத்தி அதிகரிக்கும் போது விலைவாசி குறையும். ஆனால் இங்கே முரண்பாடாக விலைவாசி அதிகரித்துள்ளது. அரிசி பருப்பு சமையல் எண்ணெய்களின் விலை 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.  இதற்கு மோடி அரசின் கார்ப்பரேட் நலனே காரணமாகும். இவர்களுக்கு சாதா ரண மக்களைப் பற்றிக் கவலை இல்லை. பாஜக அரசு விவசாயத்தில் கார்ப்பரேட்டைப் புகுத்த முயல்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வா தாரம் நாசமாகும். விவசாயம் கார்ப்ப ரேட்மயமாகும் போது அவர்கள் லாபகரமானதை மட்டுமே பயிர்செய் வார்கள். இதனால் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப் படும். மேலும் பொது விநியோ கத்துறையும் சீரழியும். கிராமப்புற ஏழை மக்களும் விவசாயத் தொழி லாளர்களும் பொது விநியோகத் திட்டத்தைச் சார்ந்துள்ளனர் . குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் 70-80 % பேர் பொது விநியோகத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.  கேரளா வில் 90% பேர் பொதுவிநியோ கத்துறையினால் பயன்பெறுகின் றனர். ஒன்றிய பாஜக அரசு முன்மொழி யும் ஒரே நாடு ஒரே ரேசன்கார்டு என்பதன் மூலம் இந்த பொதுவிநி யோக முறையை முற்றிலும் சீரழிக்க முயல்கிறது.

இடதுசாரி மாடல் 

தமிழக அரசின்  நலத்திட்டங்களை வரவேற்கிறோம். அதே சமயத்தில் பொருளாதாரக் கொள்கையில் எங்களுக்கு மாற்றுக் கருத்துள்ளது. சாலைகள் அமைக்கிறோம், விரி வாக்கம் செய்கிறோம் என்று விதவித மான பெயர்களில்  சாதாரணமக்களின் நிலங்களையும் வீடுகளையும் பறிப்பதை எதிர்க்கிறோம். தரிசு நிலங்களை கைப்பற்ற வேண்டும் . 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்க ளாக உயர்த்த வேண்டும் . தினக் கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை நகர்ப் புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு நிலம், வீடு கோரிக்கையை முன் வைத்து ஆகஸ்ட்டு 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் நாடுதழுவிய போராட்டத்தை வலிமையாக நடத்த வேண்டும்.   கேரளாவில் விவசாயத் தொழிலா ளர் உள்ளிட்ட சாதாரணத் கூலித் தொழிலாளரின் தினசரி வருமானம் ரூ.800 -900 மாக உள்ளது. இது மோடி யின் குஜராத் மாடலோ , ஒன்றிய மாடலோ அல்ல. மக்களுக்கான இடது சாரி மாடல் இதுதான். இந்த இடது சாரி மாடல் மக்களைப் பாதுகாத்து சுய மரியாதையுடன் வாழவைக்கும். இந்த மாடலைத்தான் நாடு முழுவ தும் எடுத்துச் செல்ல வேண்டும் .பல்வேறு நாடுகளில் இடதுசாரி அர சாங்கங்களை மக்கள் தேர்ந்தெ டுத்துள்ளனர் .

மறுபுறம் மோடியின் நண்பரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார் . ஜப்பான் முன்னால் பிரதமர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப் பட்டார் . இவ்வாறு மக்கள் மத்தியில் கோபம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இதனடிப்படையில் ஒன்றிய மோடி அரசின் கொள்கை களுக்கு எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து ஒன்றிய அரசை வீழ்த்த வேண்டும் என்றார்.  இதில், மாவட்டச் செயலாளர் கே. சண்முகவள்ளி, துணை ச் செயலா ளர் எஸ். மாணிக்கம் துணைத் தலை வர் எஸ்.பி ,மாரிமுத்து மற்றும் ஏராள மானோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்டப் பொருளாளர் என் . நாகராஜன் நன்றி கூறினார்.