புதுதில்லி, டிச.5- அரசுகள் மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்க ளவைத் தலைவருமான வெங்கையா நாயுடு கூறினார். பொதுக் கணக்குக் குழு அமைக்கப்பட்டதன் 100-ஆவது ஆண்டு விழா, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பொது கணக்குக் குழுத் தலைவரும், மக்க ளவை காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசிய தாவது: அரசின் நிதி வீணாக செலவு செய்யப்படு வதைத் தடுப்பதற்கு, அந்த நிதி சமூகப் பொரு ளாதார நோக்கங்களுக்கு உதவும் வகையில் செலவு செய்யப்படுகிறதா என்று பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்கிறது. பல்வேறு அரசுகள் வேறு நோக்கங்களுடன் இலவசங்களை தாராளமாக வழங்கி வருகின்றன. மக்களின் நலன், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கங்களின் முக்கியக் கடமை. அதே வேளையில் வளர்ச்சியின் நோக்கங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். வீண் செலவுகள், வளங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டிய நாயுடு, பொதுக்கணக்குக்குழுவின் ஆய்வு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ‘ஆய்வு பயத்தை’ உருவாக்கு கிறது. இதன் விளைவாக முறையான முன்னேற் றம், பெரிய அளவிலான நிதி அளவிலான முறை கேடுகள், வீண் செலவுகள் தடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு உறுப்பினரும் பொதுக்கணக்குக்குழு வில் இருக்க வேண்டும். மக்கள் நலனை உறுதி செய்வதும், ஏழை, எளி யவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டி யதும் அரசின் முக்கியமான கடமைகளில் ஒன்று. அதேசமயம், மக்கள் நலத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றனவா என்று ஆராய வேண்டும். இதுதொடர்பாக விரிவாக விவாதிக்கக் கூடிய வகையில், இந்த விவகாரத்தை பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்ய வேண்டும். கணக்குகளைத் தணிக்கை செய்வது பொதுக் கணக்குக் குழுவின் முதன்மையான பணி. எனவே, இந்தக் குழுவின் பெயரை ‘பொதுக் கணக்கு கள் மற்றும் தணிக்கைக் குழு’ என்று மாற்றலாம். நாடாளுமன்றம் ஆண்டுக்கு குறைந்தது 100 நாள்களாவது செயல்பட வேண்டும்; இதேபோல், சட்டப்பேரவைகள் 90 நாள்களாவது செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். பொதுக் கணக்குக் குழுக் கூட்டங்களுக்கு உறுப்பினர்கள் வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசும் போது, ‘நிதியைச் செலவு செய்வதில் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதும் அரசை பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதும் பொதுக் கணக்குக் குழுவின் முக்கியப் பொறுப்பாக உள்ளது’ என்றார்.