சென்னை, பிப்.21- தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று 1000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண் டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கைகள் நடத்தும் “நம்ம கபே’’ சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக் கையினால், தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்றின் அளவு ஆயிரத்திற்கும் கீழே குறைந்திருக்கிறது. மிக விரை வில் பூஜ்ஜியத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத் தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 92 விழுக் காட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 2ஆவது தவணை தடுப்பூ சியை 72 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அகில இந்திய அளவில் 175 கோடி அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 9 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 169 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை 23ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்தி 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் செலுத்திக்கொள்ள லாம். நாள்தோறும் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் ஆகிய மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் பயன்படுத்தி தமிழகத்தில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறோம். பேரிடர் காலத்தில் தடுப்பூசி ஒன்றுதான் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வ தற்கு உதவும். தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் பல லட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு பல வகைகளில் உதவியாக இருந்தார்கள். அதுபோல் தற்போதும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் நிலுவையில் இருப்பதால், இலவச தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.