tamilnadu

img

நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை? உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தல்

கோவை, ஏப்.2- கோவை தனியார் நீட் தேர்வு பயிற்சி  மையத்தில் படித்து வந்த மாணவி தற்கொலை விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற் கொள்ள வேண்டும் என முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், கோவில் பாளையத்தை அடுத்த கொண்டயம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகா டமி என்ற பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையம் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130  பேர் பயின்று வருகின்றனர். அங்குள்ள  விடுதியிலேயே பலர் தங்கி படித்து வருகின்றனர். இம்மையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கோவை சீர நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்பவர் பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.  இப்பயிற்சி மையத்தில் மது ரையை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவ ரும் சேர்ந்து படித்து வந்துள்ளார். இதில், ஸ்வேதாவிற்கும், யோகேஸ் வரனுக்கும் இடையே பழக்கம் இருந் துள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த பெற்றோர் கண்டித்துள்ளனர்.  மேலும்,  யோகேஸ்வரனை அவரது பெற்றோர் மதுரைக்கு அழைத்து சென் றனர். இந்நிலையில், மனமுடைந்த ஸ்வேதா, வெள்ளியன்று  காலை தங்கி யிருந்த அறையிலேயே தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.

இதனை  ஜன்னல் வழியாக கண்டு அதிர்ச்சிய டைந்த உடன் படிக்கும் மாணவிகள், விடுதி காப்பாளருக்கு தகவல் தெரி வித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல றிந்த கோவில்பாளையம் காவல் துறை யினர், ஸ்வேதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். சந்தேக மரணம் இந்நிலையில் உயிரிழந்த மாணவி யின் பெற்றோர், மாவட்ட வருவாய்  அலுவலர் ப்.பி.லீலா அலேக்சை சந் தித்து, மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனு வில், தங்களது மகள் ஸ்வேதா வாரி மெடிக்கல் அகாடமியில், கடந்த 5 மாதங் களாக அங்கேயே தங்கியிருந்து படித்து வந்தார். இந்நிலையில், வாரி அகாட மியிலிருந்து எங்களை தொடர்பு கொண்டு, ஸ்வேதா உடல்நிலை சரி யில்லாமல் மயங்கி விழுந்துவிட்டார் என்றும், கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்துள்ளோம் என்றும், உட னடியாக நீங்கள் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தார்கள். இதனைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்த பொழுது தனது மகளை ஆம்புலன்சில் படுக்க வைத்திருந்தார்கள். நான் அரு கில் சென்று பார்த்தபோது எனது மகள் இறந்த நிலையில் இருந்தார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தனது மகள், யோகேஸ் வரன் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனை மனமுடைந்து தற்கொலை செய்து விட் டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கருதுகிறேன். எனது மகள் மர ணத்தை உடனடியாக என்னிடம் தெரி விக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக சொன்ன காரணம் என்ன என்றும், இந்த வழக்கில் புலனாய்வு தூவங்குவதற்கு முன்பு எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டதாக சொல்லப்பட்ட அறை யாரால், சுத்தம் செய்யப்பட்டது, எதற்காக சுத் தம் செய்யப்பட்டது என்ற விவரம் தெரிய வில்லை. இதுவரை யோகேஸ்வரனை யும், அகாடமி நிர்வாகத்தையும் காவல் துறை விசாரிக்கவில்லை. ஸ்வேதாவை நீட் பயிற்சிக்காக அகாடமியில் சேர்ந்து பொழுது எனது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித் தார்கள். அந்த உறுதியை காப்பாற்றத் தவறிய காரணத்தினால் மேற்படி நிர் வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வும், எனது மகள் மரணத்தை வன் கொடுமை வழக்காக பதிவு செய்ய  வேண்டும் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட வருவாய் அலு வலருடனான சந்திப்பில், திராவிடர் தமி ழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் வெண்மனி, தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநில துணை பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சுசி.கலையரசன் உள்ளிட்ட பல்வேறு ஜன நாயக முற்போக்கு அமைப்பின் நிர்வா கிகள் உடனிருந்தனர்.