காஞ்சிபுரம், டிச.23- ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பகத்சிங்தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டாங்குளத்தூர் பகுதி செயலாளர் குணசேகரன், காஞ்சிபுரம் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கார்த்திக், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஜெனிட்டன், வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் மா.பா.நந்தன், படப்பை பகுதி பொருளாளர் எஸ்.ஒசுராண், மாணவர் சங்க செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் ஆனந்தராஜ், மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி ஆகியோர் டிசம்பர் 23 வியாழக்கிழமையன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறைவாசலில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் இ.சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ், ஆர்.மதுசூதனன், ஆர்.சௌந்தரி, காஞ்சிபுரம் பெருநகர குழு செயலாளர் டி.ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், வி.சிவப்பிரகாசம், புவனேஸ்வரி, வாலிபர் சங்க காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார், நகர பொருளாளர் சூரிய பாரதி உள்பட ஏராளமானோர் வரவேற்றனர். வழக்கறிஞர்கள் பிரதாபன், ருத்ரநாத், பொன்னுரங்கம் ஆகியோருக்கும் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.