tamilnadu

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் ஒன்றிய அரசு

சென்னை,ஜன.18- ஜி-தமிழ் தொலைக்காட்சி யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பான, “சிறுவர்கள் நையாண்டி நிகழ்ச்சிக்கு” விளக்கம் கேட்டு, ஒன்றிய அரசு நோட்டீஸ் அனு ப்பியுள்ளது ஊடக-கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்று  தமிழ்நாடு யூனியன் ஆப்  ஜெர்னலிஸ்ட் ( டி.யூ.ஜெ)  கடுமை யாக கண்டித்துள்ளது. இது குறித்து,டி.யூ.ஜெ. மாநிலத் தலைவர்,தோழர் பி.எஸ். டி.புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: “நகைச்சுவையாக” எடுத்துக் கொள்ள தெரியாத, தமிழ்நாடு பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார், பெங்க ளூரில் உள்ள,ஜி-பொழுது போக்கு சேனலின், தென்னிந் திய, தலைமை அதிகாரி  சிஜூ பிரபாகரனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்நிகழ்ச்சி குறித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஒன்றிய  ஒலிபரப்புத்துறை, உ.பி.மாநிலம்,நொய்டாவில் உள்ள, ஜி டி.வி.யின், எம்.டி.க்கு ஒரு  கடிதம் அனுப்பி,”ஜி-தமிழ் ஒளிபரப்பான நிகழ்ச்சி குறித்து, 1வாரத்திற்கு  விளக்கம் தெரிவிக்க வேண்டும்.இல்லை என்றால் நடவடிக்கை எடுப் போம்”என அச்சுறுத்தியுள்ளது.   மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும்,ஒன்றிய அரசின், தகவல் ஒலிபரப்புத்துறை”பா.ஜ. க.வின் ஊதுகுழலாக-ஒலிபரப்பு துறையாக”மாறி ஊடக-கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதை அனுமதிக்கமாட்டோம்.   ஒன்றிய அரசின் தவறான நட வடிக்கைக்கு எதிராக  ஒற்று மையுடன் போராட முன்  வருமாறு, தமிழக ஊடக வியலாளர்களை டி.யூ.ஜெ அறைகூவி அழைக்கிறது.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.