tamilnadu

உலகின் பசுமை வளர்ச்சிக்கு பங்கு: சீனாவுக்கு ஐ.நா., அதிகாரி பாராட்டு

உலகின் பசுமை வளர்ச்சிக்கு பங்கு: சீனாவுக்கு ஐ.நா., அதிகாரி பாராட்டு

இவ்வாண்டு ஐ.நா நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவாகும். ஐ.நா விவகாரங்களில் சீனா எப்போதுமே ஆக்கமுடன் பங்கேற்று வருகிறது. தற்போது, உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைமை நாடாகவும், உலக வளர்ச்சி லட்சியத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்ற நாடாக வும் சீனா கருதப்படுகிறது. திட்ட சேவைகளுக்கான ஐ.நா அலுவலகத்தின் செயல் தலைவர் ஜார்ஜ் மொரேரா டா சில்வா அண் மையில் சீன ஊடகக் குழு மத்துக்குச் சிறப்புப் பேட்டிய ளித்தார்.  அப்போது அவர் கூறு கையில், பலதரப்புவாதத் துக்கான சீனாவின் ஆதரவு மிகவும் முக்கியமா னது. தற்போது, உலக ஒத்து ழைப்பு அமைப்புமுறையை வலுப்படுத்த வேண்டும். இந்த நிலையில், சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்றார். சீனாவுடனான ஒத்து ழைப்பு குறித்து அவர் கூறு கையில், பல ஆண்டுகளாக, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள வள ரும் நாடுகளுக்கு சீனா ஆக்க முடன் ஆதரவு அளித்து வருகிறது. உலக வளர்ச்சி முன்மொழிவு என்றாலும் சரி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டு மானம் என்றாலும் சரி, வளரும் நாடுகளுடன் சீனா கூட்டாளி உறவை ஆழ மாக்கி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதை வெளிப் படுத்தியுள்ளது. அத்துடன், வளரும் நாடுகள், பலதரப்பு வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை மேற் கொண்டு, வளரும் நாடுக ளின் உள் கட்டமைப்புக்குப் பெரிதும் ஆதரவு அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். காலநிலை மாற்றத்துக் கான சமாளிப்பு குறித்து, அவர் கூறுகையில், வளர்ச்சி ஒத்துழைப்பு, காலநிலை நட வடிக்கை, பசுமையான நிகழ்ச்சி நிரல் ஆகிய துறை களில் சீனாவின் உறுதியான வாக்குறுதிகள், பல்வேறு நாடுகள் மேலும் உயர் நிலையிலான இலக்கை நோக்கி முன்னேறுவதை விரைவுபடுத்த விரும்புவ தாக தெரிவித்தார். தவிர வும், உள்நாட்டில் பசுமை யான வளர்ச்சி முறை மாற் றத்தை சீனா முன்னேற்றி வரு வதுடன், வளரும் நாடுகளு டன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பசுமை வளர்ச்சியைக் கூட்டாக விரைவுபடுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.