tamilnadu

img

தியாகி வேலுச்சாமி நினைவு தினம் கடைபிடிப்பு

நாமக்கல், மார்ச் 10- தியாகி பள்ளிபாளையம் வேலுச் சாமியின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைபிடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் பகுதியில் விசைத்தறி தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை கந்து வட்டி கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்தி, அதனை வீடியோ வாக பதிவு செய்து மிரட்டி வந்தனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வேலு சாமி, காவல் நிலையத்தில் புகார் அளித் துவிட்டு, வீடு திரும்பியபோது அவரை வழிமறித்த கந்துவட்டி கும்பல் சரமாரி யாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில், தியாகி வேலுசாமி யின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத் தில் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் தியாகி வேலுச்சாமியின் உருவப்படத்திற்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத் தப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பள்ளிபாளையத்தில் நடைபெற்ற நினைவு தினக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. பெருமாள், ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர். மேலும், நாமக் கல்லை அடுத்த பள்ளிபாளையம் செங் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் தியாகி வேலுச்சாமி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து செவ் வணக்கம் செலுத்தப்பட்டது.