tamilnadu

திருச்சி சரக டிஐஜிக்கு அவகாசம்

திருச்சி சரக டிஐஜிக்கு அவகாசம் சீமான் மனுவுக்கு  பதில் அளிக்க

மதுரை: திருச்சி சரக டிஐஜி வருண் குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக நாம்  தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், அதுவரை விசாரணைக்கு தடை கோரியும் சீமான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசார ணைக்கு வந்தபோது திருச்சி நீதிமன்றத் தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு  விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித் தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மனு வுக்கு டிஐஜி வருண்குமார் தரப்பில் பதி லளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.  அதற்கு அனுமதி வழங்கி விசார ணையை ஆக.12-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.