tamilnadu

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை இல்லை

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை,ஜன.25- தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என  சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மாக மறுத்துவிட்டது. கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள்  தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  கடந்த 15  நாட்களில் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழு மடங்கு  அதிகரித்துள்ளது. தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலைமை சீராகும் வரை  தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வாதிட்டனர். 

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்சநீதி மன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக  காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக் கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவ தாகவும்,  அரசு நெறிமுறைகள் பின்பற்ற ப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் கூறுகை யில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறி வுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாக வும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என்றும்  தெரிவிக்கப் பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தர வின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து ள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடி யாது. அரசியல் சட்டத்தை பின்பற்ற  தவறியதால்தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாக வும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதி மன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்பு டன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடு வதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்றும் தெரி வித்தனர்.

2 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசு  மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை கள் எடுத்து வருவதாகவும், பிரச்சா ரத்துக்கு செல்லும் வேட்பாளர் மூன்று பேருக்கு மேல் செல்லக் கூடாது என கொரோனா தடுப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினர்.  அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், நான்கு மாதங் களில் தேர்தலை அறிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தால், நீதித்துறை ஒழுங்குபடி, உச்சநீதி மன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதி மன்றம், தேர்தலை தள்ளிவைக்கும்படி உத்தரவிட முடியாது என திட்டவட்ட மாக மறுத்து விட்டனர். தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிகள், கடந்த  ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அறி விக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாநில அரசின் நடவடிக்கை களுக்கு  பாராட்டு தெரிவித்த நீதிபதி கள், மாநில தேர்தல் ஆணைய கொரோ னா தடுப்பு விதிகளை அனைத்துக் கட்சி களும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வர லாம். தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல்  நடத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அதை தொடரக் கூடாது.  தேர்தலை அறிவித்தால் அது  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் மாநில  தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டனர். மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த கொரோனா விதிகளை முழு மையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்தனர்.  தேர்தல் அறிவிப்புக்கு பின் இந்த வழக்குகளை விசார ணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.