மதுரை, ஜன.3- மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை துவங்கிட கோரி கடந்த டிசம்பர் மாதம் 14.12.2021 அன்று கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் துவங்கிய காத்திரு க்கும் போராட்டம் திங்களன்று 20வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தில், கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் டி.இரவீந்திரன், மாவட்டச் செய லாளர் கரு.கதிரேசன், சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலை மாவட்டச் செய லாளர் சக்திவேல், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் என்.ஸ்டாலின் குமார், கரும்பு விவசாயி சங்க நிர்வாகி கள் அடைக்கன், சுபாஷ், பி.போஸ், ராம்ராஜ், சுப்பரமணி, அடைக்கன் பெரு மாள் முன்னால் ஊராட்சி மன்றத் தலை வர் எஸ்.முருகன், சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகிகள் ஆர்.ராமு ,எம் ராமு பி.பாண்டி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந் திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சி. ராமகிருஷ்ணன், எஸ்.பாலா, சிவ கங்கை சக்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும் சிபிஎம் சிவகங்கை மாவட்டச் செயலாளருமான ஆர்.கே. தண்டியப்பன், ஒன்றியச் செயலா ளர் எஸ்.ஆண்டிச்சாமி, விதொச மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ் வரன், மாவட்டச் செயலாளர் சொ. பாண்டியன், துணைச் செயலாளர் து. ராமமூர்த்தி ஆகியோர் ஆதரித்து பேசி னர். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயி கள் ஆலையின் முன்பு காத்திருப்பு போராட்டத்திற்கு அலங்காநல்லூர் பெரிய ஊர்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தில் இருந்து பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.