‘‘பெரும்பான்மை என்ற கொடுங் கோன்மை’’ ஒரு நிமிடத்தில் ஒரு மாநிலத்தையே இல்லாமல் செய்து விட்டது. மற்றொரு தருணத்தில் ஒரு நிமிடத்தில் வேளாண் விரோதச் சட்டங்களை நிறை வேற்றி லட்சக்கணக்கான விவசாயிகளை ஒரு வருடத்திற்கும் மேலாக போராட வைத்தது. ஒரு அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்ததையெல்லாம் நினைத்த போதெல்லாம் செய்துவிட முடியாது. ஒரு காவல் அதிகாரி கையில் துப்பாக்கி இருக்கிறது என்பதற்காக அவர் நினைத்த போதெல்லாம் யாரையும் சுட்டுவிட முடியாது. சுடுவதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு, ‘‘பெரும்பான்மை’’ என்ற வாய்ப்பை ஆபத்தான காரியங்களுக்கு பயன்படுத்து கிறது. ஐந்து நிமிடத்தில் 15 தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. பதினைந்து ஆண்டு களுக்கு முன்பு நாடாளுமன்ற நிலைக்குழு விற்கு குறைந்தது 105 தீர்மானங்களாவது அனுப்பி வைப்பார்கள்.
அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு குறைந்தது அதை ஒரு மாத காலமாவது ஆய்வு செய்து தங்களது கருத்துக்களை அவைக்குத் தெரிவிக்கும். பிரதமர் மோடி ஆட்சியில் நிலைக் குழுவிற்கு 10 அல்லது 15 தீர்மானங்கள் வந்திருந்தால் அது பெரிய சாதனை. ‘‘பெரும்பான்மை’’ என்ற பாஜகவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு மிருகத்தனமாக பயன் படுத்தப்படுகிறது. குறிப்பாக விவசாயி களின் விளை நிலங்களை பறித்து கார்ப்பரேட்டு களிடம் ஒப்படைப்பது. அவர்களிடமே நிலம் விற்ற விவசாயிகளை அடிமையாக்குவது என்ற முடிவில் தான் வேளாண் விரோத சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் விவசாயத்தை மட்டும் பறிக்கவில்லை. விளைபொருளை, உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் பறிக்கிறது. வேளாண் விரோதச் சட்டங்கள் லட்சக் கணக்கான விவசாயிகளது போராட்டங்களின் மூலம் திரும்பப்பெறப்பட்டது. துப்பாக்கியால் இருந்து வெளிவரும் தோட்டாவுக்கு பலியாவதை விடக் கொடுமை யானது ‘பசி’ என்கிற ஆயுதம். பசியற்றவர் களாக மக்களை மாற்ற வேண்டும். ஆனால், கொரோனா காலத்தில் மாநிலம் விட்டு மாநி லம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பசிக்கொடுமையை அனுபவித்தார்கள். ஆனால், அதைப் பற்றி எந்த சலனமும் இன்றி மோடி அரசு மவுனமாக இருந்தது.
பெரும்பான்மை என்ற கொடுங்கோன்மை யைப் பயன்படுத்தி மோடி அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது. மின்சா ரத்தை தனியார்மயமாக்குகிறது. பல்வேறு தேசிய இனங்கள் என்பதை மறுதலிக்கிறது. நாடாளுமன்றத்தில் மோடி எந்த விவாதத் திற்கும் பதிலளிப்பதில்லை. பத்திரிகை யாளர்களைக் கூட சந்திப்பதில்லை. தேர்தல் முடிந்த பின் மொத்த டீசல் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த் தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படப் போவது ரயில்வே, போக்குவரத்து, மின்நிலை யங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தான். சென்னை-மதுரை இடையிலான விமானக் கட்டணம் ரூ.5000 வரை உயரும் அபாயம் உள்ளது. மொத்த டீசல் கொள்முதல் விலை உயர்வால் தமிழக அரசு இனி மொத்த மாக டீசலை வாங்காது. முன்பு ஒருமுறை நடை பெற்றதைப் போல் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் வாங்குவார்கள். இதற்காக பேருந்துகள் பயணிகளுடன் பெட்ரோல் நிலையங்களில் நிற்க வேண்டியிருக்கும். ‘‘பெரும்பான்மை என்ற கொடுங் கோன்மை’’ கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது.
கார்ப்பரேட்டுகளை பற்றியே மோடி சிந்திக்கிறார். உழைப்பாளி மக்களின் நிலை குறித்து கவலைப்படுவதில்லை. மோடி அரசின் வேளாண் விரோதக் கொள்கை களுக்கு எதிராக எப்படி தில்லியில் விவசாயி கள் ஒன்றிணைந்து போராடினார்களோ, அதைப்போல் ஒவ்வொரு பிரச்சனையின் அடிப்படையிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வெற்றி பெறுவார்கள். அந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23வது மாநாடு மதுரையில் மார்ச் 30 அன்று துவங்குகிறது. இதன் ஒரு பகுதியாக மார்ச் 22 அன்று நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் ஆற்றிய உரையிலிருந்து...