பேரூராட்சிகளில் நூறுநாள் வேலைத்திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி வியாழனன்று நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அணிதிரண்டனர்.