tamilnadu

img

என்டிபிஎல் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

தூத்துக்குடி, பிப்.20- என்டிபிஎல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த  தொழிலாளர்கள் 1300 பேர் கடந்த எட்டு நாட்களாக  சிஐடியு தலைமையில் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டார்கள். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திங்களன்று மதியம் 2 மணிக்கு சென்னை துணை தொழிலாளர் தலைமை ஆணையர் அலு வலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தையில், என்எல்சியிலிருந்து  மனிதவள செயல் இயக்குனர் தியாகராஜன் தலைமையில் வந்த 5 உயர் அதிகாரிகள், காண்ட் ராக்டர் பிரதிநிதிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் இவர்களோடு, சிஐடியு மாநில  பொதுச் செயலாளர் சுகுமாறன், மாநில துணைத் தலைவர் விஜயன், மின் ஊழியர் மத்திய அமைப்  பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், சிஐ டியு மாநிலச் செயலாளர் ரசல், போராட்டத்தின் தலை வரும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் என்டிபிஎல் கிளைச் செயலாளருமான அப்பாதுரை , போராட்டக் குழு நிர்வாகிகள் மணிகண்டன், பிரபாகர், குற்றால  குமார், பாலா, ராமர் ஆகியோரும் பங்கேற்றனர்.  துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஈட்டிய விடுப்பு அனு மதிக்கப்படும். கொரோனா காலத்தில் பணி நீக்கம்  செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர் களுக்கும்  உட னடியாக வேலை வழங்கப்படும்.

தேசிய விடுமுறை மற்றும் பண்டிகை விடு முறைக்காக இதுவரை வழங்கப்படாத பிஹெச் ஊதியம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை 6.10. 2022 தேதியில் இருந்தும் சூப்பர்வைஸர்கள் மற்றும் பொறியாளர்களை பொறுத்தவரை 1.1.2023 தேதி யிலிருந்தும் வழங்கப்படும்.  மாதச் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதியோ அதற்கு முன்பாகவோ வழங்கப்பட்டு விடும். ஒப்பந்த தொழிலாளர்கள் குறைகளை களைய  குறை தீர்ப்பு குழு அமைக்கப்படும். அதில் சங்க பிரதி நிதி ஒருவரும் நியமிக்கப்படுவார். மாத ஊதியம் 21,000 ரூபாய்க்கு மேல் பெறக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள், பொறியாளர்களுக்கு போனஸுக்கு பதிலாக கரு ணைத்தொகை வழங்குவது குறித்து உரிய நேரத்தில் பேசி தீர்வு காணப்படும். தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்வது தொடர்பான துல்லியமான கோரிக்கையை உடனடி யாக தொழிற்சங்கம் கொடுக்க வேண்டும். என்எல்சி தலைமையகம் உட்பட அனைத்து தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி 75 நாட்களுக்குள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உடன்பாடு ஏற்பட்டது . இதன் அடிப்படையில் மே 5 வரை வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள போராட்டக் குழு முடிவு செய்துள்ளது. செவ்வா யன்று காலை 6 மணிக்கு போராட்டம் முறைப்  படி விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக போராட்டக் குழு தலைவர் அப்பாதுரை அறிவித்துள்ளார்.