நாமக்கல், மார்ச் 16- தோழர் பள்ளிபாளையம் வேலுச்சாமி படுகொலை மற்றும் விசைத்தறி பெண் பாலி யல் வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளி களுக்கு தண்டனை பெற்று தந்த வழக்கறி ஞர் திருமலைராஜனுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கந்துவட்டி கும்பலால் விசைத்தறி தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய் யப்பட்டதற்கு நீதி கேட்டு போராடிய, மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் கிளைச் செயலாளர் தோழர் வேலுச்சாமி, கந்துவட்டி கும்பலால் படுகொலை செய் யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் 12 ஆண்டுக ளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த திங்களன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, 3 ஆண்டு கடுங்காவல் தண் டனை, ஒரு ஆண்டு சிறை தண்டனை, மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் மிகச்சிறப்பாக வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் திருமலைரா ஜனை, ஈரோட்டில் உள்ள அவரது இல்லத் தில் சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் பி.சண்முகம், மூத்த தலை வர் துரைராஜ், நாமக்கல் மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோ கன், சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கே.மோகன் உட்பட பலர் சால்வை அணி வித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.