கோடை விடுமுறை நிறைவு இன்று முதல் உயர்நீதிமன்றம் வழக்கம் போல் செயல்படும்!
சென்னை, ஜூன் 1 - சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு கடந்த மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்பட்ட நிலை யில், திங்கட்கிழமை (ஜூன் 2) முதல் உயர்நீதிமன்றம் தனது அன்றாடப் பணிகளை தொடங்கவுள்ளது. புதிய தலைமை நீதிபதி இந்நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வந்திருக்கும் நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக திங்களன்று பொறுப்பேற்கிறார். நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பணி யிடங்கள் மொத்தம் 75 ஆக உள்ள நிலையில். தற்போது 59 நீதிபதிகள் பணியில் உள்ளனர். நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் பதவியேற் றால் இந்த எண்ணிக்கை 60 ஆக உயரும். தவிர இந்த மாதத்தில் மேலும் 2 நீதிபதிகள் பணி ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜூன் 6 வரை மிதமான மழை தொடரும் சென்னை,
ஜூன் 1 - மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 6-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனனும, தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், ஜூன் 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலங்களவை: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, ஜூன் 1 - மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதிமுக துணைப் பொதுச்செய லாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாநிலங்களவைத் தேர்த லில் அதிமுக சார்பில் வழக்கறி ஞர் பிரிவு செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலை வர்- முன்னாள் எம்எல்ஏ ம.தன பால் ஆகியோர் அதிகாரப்பூர்வ வேட் பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தனர். தேமுதிக-வுக்கு இடம் எதையும் ஒதுக்காத அதிமுக, 2026-இல் நடைபெறும் தேர்தலின் போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.