சென்னை, பிப். 21 - அறநிலையத் துறை ஊழியர்களை, கோவில் ஊழியர்களாக தற்காலிக அயல்பணியில் நியமித்ததில் எந்த தவறும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழக கோவில்களுக்கு அறநிலைய துறை ஊழியர் களை அயல்பணியாக நியமித்ததை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் திங்களன்று (பிப்.21) விசாரணைக்கு வந்தது. கோவில் ஊழியர் களை நியமிக்க அறங்காவ லர்களுக்கு மட்டுமே அதி காரம் உள்ளது. அறநிலை யத் துறை ஆணையருக்கு அதிகாரமில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோவில்களில், 19 ஆயிரம் கோவில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக் கறிஞர் சண்முக சுந்தரம், அறங்காவலர்கள் நியமன நடைமுறைகள் துவங்கி யுள்ளது. நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக அறங்காவலர் நியமனம் தொடர்பான நடைமுறைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றார். இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், கோவில்களில் பல ஆண்டுக ளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகத்தை கவனிக்க ஏதுவாக ஊழியர்களை நியமிக்க அறநிலைய துறை ஆணை யருக்கு அதிகாரம் உள்ளது. கோவில் நலனை கருதி அயல்பணியில் அற நிலையத் துறை ஊழியர் களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை என தெளிவுபடுத்தினர். அறங்காவலர்கள் நியமனத்தை உயர் நீதி மன்றம் கண்காணிப்பதா கவும், விரைவில் அறங்காவ லர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்ப்பதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.