விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, ஜூலை 11 திங்களன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகைமாலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.சரவணன், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எல்.சிவலிங்கம் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.