tamilnadu

மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற சாயம் பூசுவதா?: பாஜகவின் அருவருப்பான அரசியலுக்கு சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை,ஜன.22- மாணவி லாவண்யா மர ணத்திற்கு மதமாற்ற சாயம் பூசும் பாஜகவின் அருவருப்பான அர சியல் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:                 தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத் தில் உள்ள தூய இருதய மேரி பள்ளி யில் பனிரெண்டாம் வகுப்பில் படித்த மாணவி லாவண்யா, விடுதியில் தொ டர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மன உளைச் சல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள் ளார். அவரது மரணம் தொடர்பாக அம்மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட திருக் காட்டுப்பள்ளி காவல்துறை, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளான 307, 511, 75, 82 (1) ஆகிய பிரிவு களின் கீழ் வழக்கும் பதிவு செய்துள் ளது. மேலும் அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் போதே அவரிடம் காவல்துறையினர் வாக்கு மூலமும் பெற்றிருக்கின்றனர். அந்த வாக்கு மூலத்தில் விடுதியில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை களும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் தனது தற்கொலை முயற்சிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்ப்பந்தம்தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பாஜக வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாணவி லாவண்யா சிகிச்சை பெறும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரையும் அவரது பெற்றோரையும் சந்திக்கச் சென்ற இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை பாஜகவினர் தடுத்து நிறுத்தி தாக்க முயற்சித்ததுடன்,  காவல்துறையினர் ஏற்கனவே பதிவு செய்துள்ள பிரிவுகளை மாற்றி, மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தான் மாணவி லாவண்யா தற்கொலைக்கு  முயன்றதாக வழக்கை மாற்ற வேண்டும் எனவும் காவல்துறையி னரை வலியுறுத்தி பிரச்சனையை திசைதிருப்பும் வகையிலான போராட்டங்களிலும் ஈடுபட்டு வரு கின்றனர். பாஜகவினரின் இத்த கைய பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், மதமாற்றம் எனும் பிரச்சனையை முன்வைத்து வீடியோவை தயாரித்த வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

ஏழை மாணவியான லாவண்யா வின் மரணத்தை, மதமாற்ற நிர்ப்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பாஜகவின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது வலுவான கண்ட னத்தை தெரிவிப்பதோடு, மத நல்லி ணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மெனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தின் அமைதியை குலைக்க திட்டமிட்டு முயற்சித்து வரும் பாஜகவின் குறுகிய அரசியல் முயற்சிகளை கண்டித்து மதச் சார்பற்ற சக்திகளும், அனைத்து ஜன நாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.