திருவனந்தபுரம், ஜுன் 28- தலைமை செயலக வளாகத்தில் நச்சுத்தன்மையற்ற காய்கறிகள் பயிரிடுவதன் ஒரு பகுதியாக ‘ஓணம் பண்டிகைக்கு ஒரு முறம் காய்கறி’ திட்டத்தின் மாநில அளவிலான தொட க்க விழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். வெண்டை, தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் நாற்றுகள் நடப் பட்டன. 1076 வேளாண் அலுவலகங் கள் (கிருஷி பவன்) மூலம் காய்கறி விதை பாக்கெட்டுகள், நாற்றுகள் மற்றும் நீண்ட கால காய்கறி நாற்று கள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 25 லட்சம் காய்கறி விதை பாக்கெட்டுகள், ஒரு கோடி காய்கறி நாற்றுகள் மற்றும் நீண்ட கால காய்கறி பயிர்கள் (முருங்கை, கறிவேப்பு, அகத்தி) இரண்டு லட்சம் நாற்றுகள் விநியோகிக்கப்படும். விழாவுக்கு வேளாண் துறை அமைச்சர் பி.பிரசாத் தலைமை வகித் தார். அமைச்சர்கள் கே.கிருஷ்ணன் குட்டி, அகமது தேவர்கோவில், அந்தோணி ராஜு, ஜி.ஆர்.அனில், கே.என்.பாலகோபால், ஜெ.சிஞ்சு ராணி, எம்.பி.ராஜேஷ், கே.ராதா கிருஷ்ணன், பி.ராஜீவ், சஜி செரியன், வி.என்.வாசவன், வீணா ஜார்ஜ், வேளாண்துறை இயக்குநர் கே.எஸ்.அஞ்சு, மாநில தோட்டக்கலைத் துறை இயக்குநர் எல்.ஆர்.ஆரதி, வேளாண் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.