சென்னை,ஜன.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலை வர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாட்டின் நலனுக்கும் மக்களது இயல்பான வாழ்வுரிமைக்கும் எதிரான திட்டங்களை மும்முரமாக செயல்படுத்திவரும் ஒரு முட்டாள் மன்னனை விமர்சித்து ஜீ தமிழ் தொலைக் காட்சியில் சிறார் நிகழ்ச்சியொன்று 2022 ஜனவரி 15 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் உள்ளடக்கம் இந்திய பிரதமரை அவமதிப்பதாக உள்நோக்கம் கற்பித்து பாஜக செய்துவரும் அழும்புகள் கருத்துரி மைக்கு எதிரானவை. குறிப்பிட்ட இந்நிகழ்வில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை கோரி காவல்துறை யிடமும் தகவல் ஒலிபரப்பு அமைச்ச கத்திடமும் பாஜக மாநிலத்தலைமை புகார் அளித்திருக்கிறது. தகவல் ஒளிபரப்புத்துத்துறை இணை யமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆறே மாதங்களில் தமிழ்நாட்டு ஊடகங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போவதாகவும், தங்களை விமர்சிப்பவர்களை, தாங்கள் ஆட்சி யில் இருக்கும்
17 மாநிலங்களின் காவல்துறையை வைத்து ஒடுக்கு வோம் என்றும் பாஜக நிர்வாகிகள் தமிழக மக்களை மிரட்டிவந்ததன் தொடர்ச்சிதான் இப்போதைய புகார். குழந்தைகளாலும்கூட விமர்சிக்கப் படுமளவுக்கு பிரதமரின் செயல்பாடு கள் இருக்கின்ற பட்சத்தில் அவர்தான் தனது கொள்கைகளையும் நடைமுறை களையும் மாற்றிக்கொள்ள வேண்டுமே யல்லாது, விமர்சிப்பவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டியதில்லை. ஆனால் பாஜக இந்தச் சிறார் நிகழ்ச்சி யுடன் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை கோரி ஜனநாயகத்திற்கு விரோதமான தனது உண்மை முகத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது. மாற்றுக்கருத்துடையோர் மீது அவதூறு பரப்பும் சமூகவிரோதி களுக்கு கருத்துரிமை கோரும் பாஜக வினர், குழந்தைகளின் ஆக்கத்திறனை யும் அரசியல் விழிப்பு மனநிலையையும் விமர்சனத்தை அச்சமின்றி வெளிப் படுத்தும் துணிச்சலையும் கண்டு ஆத்திர மடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் அதி காரத்தைப் பயன்படுத்தி குழந்தைகள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரச் செயல்பாட்டை தடுத்திடும் அவர் களது முயற்சிக்கு தமுஎகச கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இதேபோல, சாதி,மத, இன, பாலின துவேஷங்களையும் வெறுப்பரசி யலையும் எதிர்க்கிற, மக்கள் ஒற்று மையையும் மதச்சார்பின்மையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் உயர்த்திப் பிடிக்கிற அமைப்புகளையும் ஆளுமைகளையும் முடக்கிப்போடும் இழிமுயற்சி இங்கே தொடர்கிறது. இவ்வாறான அமைப்புகளும் ஆளுமை களும் தங்களது நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தி விட்டதாக சிணுங்கிக்கொண்டு காவல்துறையில் பொய்ப்புகார் அளிப்பதற்காகவே பல குழுக்கள் “இந்து” என்கிற முன்னொட்டுப்பெயரு டன் இங்கே மந்தரித்துவிடப்பட்டுள்ளன. ஒன்றிய ஆட்சியாளர்களுடன் நெருக்கமிருப்பதாக காட்டிக்கொண்டு உள்ளூர் அரசதிகாரத்தை எளியவர்கள் மீது ஏவத்துடிக்கும் இக்குழுக்களில் சில இப்போது யு2புரூட்டஸ் யு டியூ பர்ஸ் மீது காவல்துறையில் புகாரளித்திருக்கின்றன. யு2புரூட்டஸ் முன்வைக்கும் கருத்துகளையும் கேள்விகளையும் எதிர்கொள்ள முடி யாத ஆத்திரத்தில் அவர்களை முடக்கி வாய்ப்பூட்டு போட கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பொய்ப்புகார் மேல்நட வடிக்கை எதுவும் எடுப்பதற்கான முகாந்திரமற்றது. தமிழ்நாட்டின் பொது அமைதிக்கும் சுதந்திரமான ஊடகச் செயல்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இவ்வாறு பொய்ப்புகார் கொடுத்து அச்சுறுத்து வதையே தொழிலாகச் செய்துவரும் இத்தகைய குழுக்கள் மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.