சென்னை, செப்.2- தமிழ்நாடு அரசின் சார்பில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) சென்னையில் வழங்கப்படவுள்ளது. சின்னத்திரை மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளது. இதற்கான விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில், 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரைக்கும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப் படங்களான பசங்க, மாயாண்டி குடும்பத்தார், அச்சம் உண்டு அச்சம் உண்டு. மைனா, களவாணி, புத்திரன், நம்ம கிராமம். வாகை சூடவா, தெய்வத் திருமகன், உச்சிதனை முகர்ந்தால், மெரினா, வழக்கு எண் 18 / 9, சாட்டை, தோனி, கும்கி, ராமானுஜன், தங்க மீன்கள், பண்ணையாரும் பத்மினி யும், ஆள், குற்றம் கடிதல், கோலி சோடா, நிமிர்ந்து நில், காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் முறையே ஒவ்வொரு ஆண்டிலும் முதல் நான்கு படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கரன், பத்மபிரியா, விக்ரம், அமலாபால், ஒய்.ஜி. மகேந்தி ரன், விமல், இனியா, சிவகார்த்தி கேயன், அனுஷ்கா, ஜீவா. லட்சுமி மேனன், விக்ரம் பிரபு, சமந்தா, ஆர்யா, நயன்தாரா, விஜய் சேதுபதி, நஸ்ரியா நசீம், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, ஆனந்தி ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
சிறந்த இயக்குநர்கள்
சிறந்த திரைப்பட இயக்குநர்களாக வசந்தபாலன், பிரபு சாலமன், ஏ.எல். விஜய், பாலாஜி சக்திவேல், தங்கமீன்கள் ராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறந்த குணச்சித்திர மற்றும் நகைச் சுவை நடிகர்களாக பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, மனோபாலா, கஞ்சா கருப்பு, நாசர், சரண்யா பொன் வண்ணன், தம்பி ராமையா, சரத்பாபு, சிறந்த கதையாசிரியராக சேரன், பின்னனி பாடகியாக மகதி, சின்மயி, பாடலாசிரியர்களாக யுகபாரதி, நா.முத்துக்குமார், இசை அமைப் பாளராக இமான் என 185 கலைஞர்க ளுக்கு விருது வழங்கப்படுகிறது. இதேபோல் சின்னத்திரையின் சிறந்த நெடுந்தொடர், சிறந்த நடிகர், நடிகைகள் என 200 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளர். சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம் வழங்க சிறந்த படம் சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் 23 தயாரிப்பாளர்களுக்கு இருபத்தாறு லட்சத்து இருபத்தைந் தாயிரம் காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படு கிறது. சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர் களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ.1 லட்சம் என 20 பேருக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்க ளுக்கான விருதுகள் 2008 -2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013 -2014ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாண வர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்க ளில் பணியாற்றிய சிறந்த இயக்குநர் கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதி வாளர்கள், படத்தொகுப்பாளர்கள் என 30 பேருக்குத் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1,50,000 காசோலையும், 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படு கிறது.