tamilnadu

விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துவதை கைவிடுக!

சென்னை, டிச. 31 - விவசாய மின் இணைப்பு களுக்கு மீட்டர் பொருத்தும் பணியை கைவிட வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக விவசாயி கள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் பெ.சண்முகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: விவசாய மின் இணைப்புக ளுக்கு மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மீட்டர் பொருத்தப்பட்ட போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பு  காரணமாக அந்தப் பணி  நிறுத்தப்பட்டது.

அப்போது திமுகவும் மீட்டர் பொருத்து வதை எதிர்த்து அறிக்கை வெளி யிட்டது. மீட்டர் பொருத்துவது எதிர்காலத்தில் இலவச மின் சாரம் பறிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், மின்துறை அமைச்சர் அளித்துள்ள விளக் கம் விவசாய மின் இணைப்பு களுக்கு மீட்டர் பொருத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. மீட்டர் பொருத்தப்பட் டாலும், இலவச மின்சாரம் தொட ரும் என்று அமைச்சர் கூறியி ருப்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே, ஒன்றிய பாஜக அரசு மின்சார திருத்த மசோதா 2020-ன்  மூலம் இலவச மின்சாரம், மானிய  விலையில் மின்சாரத்தை ரத்து  செய்து, அனைத்து மின் இணைப் புக்களுக்கும் கட்டணம் என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மீட்டர் பொருத்துவது அந்த நிலையை உறுதிப்படுத்துவதா கவே உள்ளது.

கட்டணம் வசூ லிக்கப்படாது என்றால் எதற்காக பல கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து மீட்டர்  பொருத்த வேண்டும்? எனவே, விவசாயிகள் மத்தியில் ஏற்பட் டுள்ள அச்சத்தை போக்கிடும் வகையில், விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை கைவிட முதலமைச்சர் நட வடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மீது மேலும் மேலும் கடும் நிதிச் சுமையை ஏற்றும் வகையில் மின்சார வாரியம் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை வசூலிக்கிறது. இதற்காக 2017ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு வசூலிக் கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவையும் அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.