சந்திப்பூர்,ஜன.21- ஒலியை விட வேகமாக பறக்கும் பிரமோஸ் ஏவு கணையை இந்தியா வெற்றிகர மாக பரிசோதித்தது. ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத் தப்பட்டதாகவும் அது துல்லிய மாக பாய்ந்து இலக்கை அழித்த தாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ( DRDO) தெரிவித்துள்ளது. பிர மோஸ் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போது நவீன தொழில் நுட்பங்கள் சேர்க்கப்பட்டு சோதிக் கப்பட்டுள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணை கப்பலை யும் நிலப்பகுதியையும் தாக்கும் வகையில் இரு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம் படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தற்போது நிலப்பகு தியிலிருந்து செலுத்தப்பட்ட நிலையில் அண்மையில் கடலில் இருந்து ஏவி சோதிக் கப்பட்டிருந்தது. பிரமோஸ் ஏவுகணை ஏற்க னவே இந்திய ராணுவத்திடமும் கடற்படையிடமும் உள்ளது. இந்நிலையில் அதன் மேம் படுத்தப்பட்ட வடிவம் சேர்க்கப்பட உள்ளது.