இஸ்ரேல் அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், செப்.10 - பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யும், இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 8 முதல் 10 வரை இந்தியா விற்கு மூன்று நாள் வருகை தரும், இஸ்ரே லிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சை வரவேற்கும் பாஜக அரசாங்கத்தின் திட்டத்தை கண்டித்தும், பல்லாயிரக்கணக் கான பாலஸ்தீன குழந்தைகளைக் கொன்று இனப்படுகொலைக்கு வழிவகுத்த ஒரு குற்றவியல் அரசின் முகத்தை இஸ்ரேலிய சியோனிச ஆட்சி கொண்டுள்ளது. இத்த கைய குற்றவியல் அரசின் பிரதிநிதிகளை வர வேற்று அவர்களுடன் வணிக கூட்டாண் மையை ஏற்படுத்துவதன் மூலம், பாஜக அரசு சர்வதேச சமூகத்தின் பார்வையில் இந்தி யாவை அவமதிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில் இருந்து ஒன்றிய அரசு விலக வேண்டும் என வலியு றுத்தி, இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் வருகைக்கு எதிராக தஞ்சா வூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக புதன் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை தலைவர் ஜெனிபர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வசந்த் கண்டன உரையாற்றினர். கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கும்பகோணம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மகேஸ்வரன், கிளை மாநகரத் தலைவர் பிரபா கரன், செயற்குழு உறுப்பினர் தர்ஷினி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். திருவாரூர் இஸ்ரேல் அமைச்சர் இந்தியா வருவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டம் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி யில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பா. விக்னேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் வீ.சந்தோஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழ கன், கல்லூரி கிளை நிர்வாகிகள் ராகேஷ், ராஜேஷ், செல்வபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், திருவிக அரசு கலைக் கல்லூரி யில் மாணவர்களின் அடிப்படைத் தேவை களை அரசு பூர்த்தி செய்து தர வேண்டும். குறிப்பாக பெண்கள் கழிவறையில் நாப்கின் கருவி ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்தும் பழுத டைந்து விட்டதால், புதிதாக நாப்கின் கரு வியை உடனடியாக பொருத்த வேண்டும். நாப்கின் எரியூட்டும் கருவியையும் பொருத்த வேண்டும். கல்லூரி வளாகத்தில் வெளி ஆட்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் கல்லூரி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். வகுப்ப றைகளில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தப்பட்டன.