சென்னை, மார்ச் 28- அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி செவ்வாயன்று (மார்ச் 29) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து இரண்டு நாள் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி சென்னையில் 5 மையங்களில் ஆர்ப்பாட்டமும், மத்திய மாநில அரசு ஊழியர் சங்கங்கள், எல்ஐசி, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தென் சென்னை
பொது வேலை நிறுத்தத்தையொட்டி சைதாப்பேட்டை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இ.பொன்முடி, ஏ.பழனி, ஏ.சாதிக்பாஷா (சிஐடியு), முரளி, நாகராஜ் (ஐஎன்டியுசி), ஏ.கே.கோபாலன் (ஏஐடியுசி), எப்.மேரி, ஏ.ரங்கசாமி (சம்யுக்தா கிசான் மோட்சா) உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வடசென்னை
வட சென்னையில் 3 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் டோல்கேட் அருகே குப்பன் (ஏஐடியுசி) தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.லோகநாதன் (சிஐடியு), சுரேஷ் (அசோக் லேலண்ட்), சத்தியமூர்த்தி (மின் ஊழியர் மத்திய அமைப்பு), மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், கே.வெங்கடய்யா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சு.லெனின் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.ரவிச்சந்தி ரன், நிர்மலா, பி.என்.உண்ணி, எஸ்.எஸ்.சுப்பிரமணியன் (சிஐடியு), வி.குப்புசாமி, ஏ.ராயப்பன் (மோட்டார் வாகனம்), ஏ.எஸ்.கண்ணன், மாரியப்பன் (ஏஐடியுசி), பாரதி, முனுசாமி, மோகன் (எல்டியுசி), ஸ்டீபன் மதன், சொக்கலிங்கம் (ஐஎன்டியுசி), ராஜ்குமார் (தொமுச), கோபி (சிபிஎம்) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாதவரம் மூலக்கடையில் பி.லூர்துசாமி (சிஐடியு) தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ரவிக்குமார் (சிஐடியு), வி.கமலநாதன், வி. ஆனந்தன் (சிபிஎம்), ஏ.தமிழ்ச் செல்வி (மாதர் சங்கம்) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.