tamilnadu

நாகை மீனவர்கள் ஆறு பேர் கைது

கொழும்பு, பிப்.19- எல்லை தாண்டி மீன்  பிடித்ததாக தமிழக மீன வர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள் ளது. மீனவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள் ளது.  இந்த மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது இது நான்காவது முறையாகும். இந்த மாதத் தில் மட்டும் 29 தமிழக மீன வர்களை இலங்கை கடற் படை கைது செய்துள்ளது ஆறு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் அருகே உள்ள கோவிலன் கலங் கரை விளக்கத்திற்கு அப் பால் உள்ள கடல் பகுதியில் வடமேற்கு திசையில் ரோந் துப் பணியில் ஈடுபட்டு இருந்த போது சனிக்கிழமை அதிகாலை தமிழக மீன வர்கள் கைது செய்யப்பட்ட தாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை கடற்படை யால் கைது செய்யப்பட்ட தமி ழக மீனவர்கள் ஆறு பேரும் நாகப்பட்டினம் மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.