புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ள தீக்கதிர் மொபைல் செயலி மார்க்சிஸ்ட் கட்சியின் பொது மாநாட்டில் இன்று வெளியிடப்பட்டது.
தீக்கதிர் நாளிதழ் மற்றும் இணைப்பக்கத்தில் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இனி உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனில் வந்து சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தீக்கதிரில் வெளியாகும் முக்கிய கட்டுரைகள், செய்திகளை தேடிப்படிக்கும் வசதியும் மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கீழ்கண்ட லிங்கை https://bit.ly/3JvQhMB கிளிக் செய்து மொபைலில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தலாம். தோழர்கள் QR CODE பயன்படுத்தியும் மொபைலில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த செயலியை மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டார்.
மேலும் மொபைல் செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட கலீல் ஜாகீர், மல்ட்டி மீடியா யூனிட், மணிமாறன் விழுப்புரம் ஐடி யூனிட், கனகவேல் - மென்பொறியாளர் ஆகியோருக்கு சீத்தாராம் யெச்சூரி வாழ்த்து தெரிவித்தார்.