tamilnadu

img

3 ஆயிரம் சதுர அடி நிலத்தை வழங்கிய மூத்த தோழர்கள்

கடலூர் ஒன்றியம் ரெட்டியார் பேட்டை கிராம மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்கள் வி.துரைராஜ், வி.வைத்திலிங்கம் ஆகியோர் தங்களுக்கு  சொந்தமான 3 ஆயிரம் சதுரடி நிலத்தை உழைக்கும் மக்கள் அறக்கட்டளை பெயருக்கு பதிவு செய்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினர். அப்போது வி.வைத்திலிங்கத்திற்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ் ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், ஜெ.ராஜேஷ் கண்ணன், எஸ்.திருஅரசு, வி.சுப்பராயன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், ரெட்டியார் பேட்டை கிளைத் தோழர்கள் பி.ஆறுமுகம், வி.ராமமூர்த்தி, ஜி.சுந்தரமூர்த்தி, ஆர்.இளங்கோவன், சி.இருசப்பன், டி.முருகன் உள்ளிட்ட உடனிருந்தனர்.