tamilnadu

வேளிமலையில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம்: 460 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது

நாகர்கோவில், மார்ச்.17- கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வருவாய் கிராமத்தில் ரப்பர் ஆராய்ச்சி நிலையத்திற் கென சுமார் 460 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, அதனை இந்திய ரப்பர் வாரி யத்திற்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் புதிய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பது குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், ரப்பர்  வாரிய நிர்வாக இயக்குநர் கே.என்.ராகவனி டம் காணொலிக் காட்சி வாயிலாக கலந்தா லோசனை மேற்கொண்டார்.  பின்னர் அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் பெருமளவில் நடைபெற்று வரும் நிலையில், ரப்பருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கை பொதுமக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது வேளிமலை வருவாய் கிராமத்தில் ரப்பர் ஆராய்ச்சி நிலையத்திற்கென சுமார் 460  ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, அதனை இந்திய ரப்பர் வாரியத்திற்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலம் ஒப்பந்த அடிப்படையில் ரப்பர் வாரியத்திற்கு வழங்குவது குறித்தும், அதற்கான நிபந்தனைகள் குறித்தும் ஒன்றிய வர்த்தக துறை செயலாளருக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக கடிதம் எழுதி இறுதி செய்ய  கேட்டுக்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்.