tamilnadu

img

குழந்தைகள் பூங்கா அமைக்க கோரிக்கை

குழந்தைகள் பூங்கா அமைக்க கோரிக்கை

நாமக்கல், அக்.5- குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையம் பின்புறம் பழைய சார்பதி வாளர் அலுவலகம் உள்ளது. இது மிகவும் சேதமான நிலையில் உள்ளதால், செடி, கொடி கள் வளர்ந்து, சுவற்றை துளைத்து கொண் டுள்ளது. இதனால் கட்டிடம் மேலும் சேதமா கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதர்களில்  தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அரு கில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து  விடுவதால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப் பட்டு, அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, உடனடியாக அந்த செடி, கொடி களை அகற்ற வேண்டும். மேலும், இதனரு கில் உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட் டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் ஏற் படுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகமாகி,  பல்வேறு நோய்கள் பரவ காரணமாகிறது. எனவே, அந்த இடத்தை தூய்மைப்படுத்தி, குழந்தைகள் விளையாட, பொழுது போக்கு  பூங்கா அமைத்துத்தர வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நகராட்சி அலுவலகத்தில் மனு  அளித்தனர்.