சென்னை, ஜூன் 30 - 21 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி வியாழனன்று (ஜூன் 30) சென்னை முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில், பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் - தமிழ்நாடு மாநிலத் தில் சுமார் 1500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு பிரதி மாதம் 15ந் தேதிக்குள் சம்பளம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இருப்பினும், கடந்த 21 மாதங்களாக நிர்வாகம் ஊதியம் வழங்காமல் உள்ளது. இதே போன்று அவுட்சோர்சிங் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், பல மாவட்டங்களில் ஊதியம் வழங்கப்படா மல் உள்ளது. எனவே, 21 மாத கால ஊதிய நிலு வையை வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிர்வாகம் 2020 ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் அவுட்சோர்சிங் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஒப்பந்த தொழி லாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது, அவுட்சோர்சிங் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், அவுட் சோர்சிங் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு இபிஎப், இஎஸ்ஐ போன்ற சலு கைளை வழங்குவதோடு, இந்திய தொழிலாளர் சட்டப்படியான உரிமை களை தர வேண்டும், மறைந்த ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்கு சட்டப்பூர்வ நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 30) இந்த போராட்டம் நடை பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சி.பழனி சாமி தலைமை தாங்கினார். செயலா ளர் சி.வினோத்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பிஎஸ்என்எல்இயு தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், செயலாளர் பி.ராஜூ, பிஎஸ்என்எல்இயு சென்னை தொலைபேசி செயலாளர் எம்.ஸ்ரீதர் சுப்பிரமணியம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க செயலாளர்கள் ஆர்.ராஜசேகர் (சென்னை), சி.கே.நரசிம்மன் (தமிழ்நாடு) உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து பிஎஸ்என்எல்இயு அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா பேசினார்.