tamilnadu

img

இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டு இலட்சினை வெளியீடு

புதுக்கோட்டை, ஜூலை 25 - ஆகஸ்ட் 25 - 27 தேதிகளில் திருவாரூரில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்கத்தின் 26 ஆவது மாநில மாநாட்டு இலட்சினை வெளியிடப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் புதுக் கோட்டையில் ஞாயிற்றுக்கிழ மை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். நடைபெற உள்ள மாநில மாநாட்டுப் பணிகள் குறித்து மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் விளக்கவுரையாற்றினார்.  கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் கள் நிருபன் சக்கரவர்த்தி, சத்யா, மாநில  துணைச் செயலாளர்கள் ஆறு.பிரகாஷ், ஜி.அரவிந்தசாமி உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 25, 26, 27 தேதி களில் திருவாரூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை யொட்டி நீட் தேர்வு மற்றும் கியூட் தேர்வுகளுக்கு எதிரான மாணவர்களின் பேரணியும் பொதுக்கூட்டமும் பிரம்மாண்டமான அளவில் நடத்துவது என மாநிலக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.  மேலும், மாநில மாநாட்டுக்கான இலட்சினையும் மாநிலக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. முன்னதாக மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் வர வேற்க, மாவட்டத் தலைவர் ஏ.சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.