tamilnadu

img

ஐஐடிக்களில் அடியோடு சிதைக்கப்பட்ட இடஒதுக்கீடு

புதுதில்லி, ஜூலை 22-   ஐஐடி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர் விண்ணப்பித்தார்கள்?  இட ஒதுக்கீடு பிரிவினருக்கான இடங்கள் எவ்வளவு காலி யாக உள்ளன?  என்று நாடாளுமன்ற மக்களவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். அதற்கான 29 பக்கங்கள் கொண்ட பதிலை ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ளார்.  இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: அமைச்சர் பதிலில் தரப்பட்டுள்ள தகவல்கள் எப்படி முனைவர் பட்ட அனுமதிகள் எஸ்.சி,  எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு அநீதியை இழைக்கின்றன என்பதை விவரிக்கிறது. இட ஒதுக்கீடு அடியோடு சிதைக்கப்பட்டுள்ளது. போதுமான விண்ணப்பதாரர்கள் இருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. வழக்கமாக அரசு சொல்லும் காரணமும் இங்கே அடிபட்டுப் போயிருக்கிறது.  இட ஒதுக்கீடு நெறிகளின்படி ஐ.ஐ.டி க்கள் எஸ்.டி 7.5 சதவீதம், எஸ்.சி 15 சதவீதம்,  ஓ. பி.சி 27 சதவீதம் இடங்களை தந்திருக்க வேண்டும். 

3 ஐஐடிகளில் இடஒதுக்கீடு ஜீரோ

அமைச்சர் தந்துள்ள தகவல்களின்படி எஸ்.டி பிரதிநிதித்துவம் 2.5 சதவீதமாகவே இருக்கிறது. 3430 விண்ணப்பதாரர்கள் இருந்தும்  எல்லா ஐ.ஐ.டி களிலும் சேர்த்து மொத்தம் 137 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எந்த ஐ.ஐடியுமே உரிய பிரதிநிதித்துவத்தை தரவில்லை. மூன்று ஐ.ஐ.டிக்கள் (கோவா, பிலாய், திருப்பதி) முறையே 30, 31, 93 விண்ணப்பங்களை வரப் பெற்றும் அவர்கள் அனுமதி தந்தது ஜீரோ சதவீதம்.  எஸ்.சி  பிரதிநிதித்துவம் 10 சதவீதமாகவே இருக்கிறது. 17075 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டி களிலும் சேர்த்து மொத் தம் 574 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள் ளது. எல்லா ஐ.ஐடிகளுமே- கோவா, தன்பாத் தவிர - உரிய எஸ்.சி பிரதிநிதித்துவத்தை தரவில்லை. சென்னை ஐ.ஐ.டியில் மிகமிகக் குறைவு சென்னை ஐ.ஐ.டியில் எஸ்.சி, எஸ்.டி  பிரதிநிதித்துவம் முனைவர் பட்ட அனுமதி களில் மிக மிகக் குறைவாக உள்ளது. மொத்தம் 558 மாணவர்கள் முனைவர் பட்ட அனுமதிகளை பெற்றுள்ள நிலையில் 53 மாண வர்கள் மட்டுமே (9.5 சதவீதம்) எஸ்.சி பிரிவை  சார்ந்தவர்கள். 20 பேர் மட்டுமே (3.6 சதவீதம்)  எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால் எஸ்.சி மாணவர்கள் 1637 பேரும், எஸ்.டி மாண வர்கள் 346 பேரும் தகுதி பெற்ற விண்ணப்ப தாரர்களாக இருந்துள்ளனர். எஸ்.சி மாணவர் இடங்கள் 23, எஸ்.டி மாணவர் இடங்கள் 13 காலியாக விடப்பட்டுள்ளன. 

கல்வி நிறுவன நிதியில் இருந்து நடத்தப் படும் பிரிவுகள் மட்டுமின்றி திட்டம்/வெளி ஆதரவு நிதி மூலம் நடத்தப்படும் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு அமலாகவில்லை. ஓ. பி.சி இட ஒதுக்கீடும் ஓரளவே தரப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐ.ஐ டி மட்டுமே விதி விலக்காக உள்ளது.  இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத் திற்கான குறைந்தபட்ச சதவீதமே ஆகும். அதை  எட்டவே இந்த பாடு. சட்டம் வந்து 16 ஆண்டுகள் கழித்தும் இதுவே நிலைமை.  மனுதர்மத்தின் வழியில்  ஐஐடிகள் மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் அனு மதி இடஒதுக்கீடு) சட்டம் 2006 இடஒதுக்கீட்டை  ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் அனுமதிக்கப் பட்ட ஆண்டு எண்ணிக்கையில் (Annual Permitted Strength) உறுதி செய்ய வேண்டும் என கட்டளை இடுகிறது. ஆனால் ஐ.ஐ.டி கள்  அரசியலமைப்பு சட்டத்தை விட “மனு தர்மத்தையே” மதிக்கிறது போல. ஆகவே  அனுமதிக்கப்பட்ட ஆண்டு எண்ணிக்கையை  (Annual Permitted Strength) எந்த நெறி களுக்கும் உட்படாமல் நிர்ணயித்துக்கொள் கின்றன. இதன் மூலம் இட ஒதுக்கீட்டை நீர்க்கச் செய்கிறார்கள். ஐ.ஐ.டி கோரக்பூர் கல்வி நிறு வன நிதியில் நடத்தப்படும் பிரிவுகளுக்கு (Institute funded) “நிலையான அனுமதி எண் ணிக்கையையே” (Fixed Annual Strength) வைத்திருப்பது மீறலி்ன் உச்சம் ஆகும்.  “உயர்ந்த” கல்வி நிறுவனங்கள் என்று தங்களை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐஐடி களின் சமூக நீதி குறித்த பார்வையும், அக்கறையும் தரை மட்டத்தில் உள்ளன. அனுமதி முறைமையில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையீடு செய்யக் கூட முடியவில்லை.  அரசு சட்டத்தின் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். நேர்மையான ஆய்வை, விசாரணையை செய்து மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கோரியுள்ளார்.