tamilnadu

img

விவசாய விரோத மசோதாவுக்கு எதிராக மறியல்...

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மற்றும் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் விவசாயிகள் தில்லி எல்லைகளில் 2 மாத காலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் தரப்பில் பல்வேறுவிதமான தடுப்பரண்கள் வைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் கறுப்புச் சட்டங்களான வேளாண் சட்டங்களை ரத்து செய்திடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று உறுதியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.தில்லியில் மட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. தமிழக்தில் 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போராட்டங்களின் ஒரு பகுதி முகப்பு படமாக உள்ளது. 

;