சென்னை,மே.09- காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல்
காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. மேலும் அதிகாரிகள் மாணவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பு/வாட்ஸ்அப்: 7550331902, டோல்-ஃப்ரீ எண்: 8069009901