tamilnadu

தமிழக பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள்

சென்னை, மார்ச் 13- இயற்கை விவசாயத்திற்கான திட்டங் கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தனி நிதிநிலை அறிக்கை யில் பல்வேறு முக்கிய திட்டங்கள், அறிவிப்பு களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு   மார்ச் 18ஆம் தேதி 2022-23ஆம் நிதி யாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது.  இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில், இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும்.  விவ சாயிகளின் எதிர்பார்ப்புகளை வேளாண் பட்ஜெட் பூர்த்தி செய்யும். தமிழகத்தில், சிறு  தானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.