tamilnadu

img

பகுத்தறிவுப் பாதையில் நடைபோடுங்கள்

சென்னை,ஜூலை 29- தமிழ்நாட்டில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருவதாக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா சென்னை யில் வெள்ளியன்று (ஜூலை 29)  நடைபெற்றது. முதன்மை விருந்தி னராக பிரதமர் மோடி, கவுரவ விருந்தி னராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு இதில் பிரத மர் மோடி பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வில் பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்,“தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கடல் வணிகம், கடற்படை, இரும்பு வார்க் கும் தொழில்நுட்பம், கல்லணை,  தஞ்சை பெரிய கோவில் என வர லாற்றில் நிலைத்திருக்கும் பல  படைப்புகளைத் தனது தொழில்நுட்ப அறிவால், எல்லோருக்கும் முன்னோடி யாகத் தமிழன் படைத்திருக்கிறான். கல்வி என்பதுதான் யாராலும் திருட  முடியாத, பறிக்க முடியாத சொத்து” என்றார். பழமைவாதத்தைப் புறந்தள்ளி, புதிய கருத்துகளை ஏற்று, பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டால் தான் நீங்கள் பெற்ற பட்டத்திற்குப் பெருமை. நீங்கள் பட்டதாரிகள் மட்டுமல்ல; உலகெங்கும் வலம்வரப்  போகும் இந்தியாவின் - தமிழ் நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்கள். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற் காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம் என்றும் அவர் கூறினார்.

வலுவான அரசு  என்பது எது? பிரதமர்

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்க ளுக்கான எதிர்காலத்தை உங்களின் மனங்களில் ஏற்கெனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள். எனவே, இன்றைய தினம் மட்டும் சாதனைக ளுக்கான தினம் அல்ல, முன்னேற்றத் திற்கானதும் கூட” என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர், “ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உல கின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது” என்றும் கூறினார். வலுவான அரசு என்பது அனைத்தை யும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடை முறையின் காரணத்தை கட்டுப்படுத்து வது. வலுவான அரசு என்பது கட்டுப் படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது என்றும் இளம் தலைமுறையிடம் எனது நம்பிக்கை உள்ளது. அவர்களி லிருந்துதான் ஊழியர்கள் வருவார்கள். அவர்கள் அனைத்து பிரச்சனைகளி லிருந்தும் வெளிவர சிங்கங்கள் போல் பாடுபடுவார்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளால் ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவின் இளைஞர்களை எதிர் நோக்கியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.