tamilnadu

கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை,மார்ச்26- நெல்லை மாவட்டம் கூடங் குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அங்கு 3, 4-ஆவது அணு உலைகள் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 5, 6-ஆவது அணு உலைக ளுக்கான கட்டுமானப் பணி கள் தொடங்கி உள்ளன. முதல் 2 அணு உலைக ளில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் பட்டு, அதில் இருந்து தமிழ கத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் வெள்ளி யன்று(மார்ச்25) காலை 7 மணிக்கு பராமரிப்புப் பணிக் காக 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. 2-ஆவது அணு உலை யில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொ ருட்களும் மாற்றப்படு கின்றன. இதற்கு சுமார் 55 நாட்கள் ஆகும் என்று அணு மின் நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே அதன்பிறகே 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.