tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாமக நிலை ‘மிகவும் வருத்தமளிக்கிறது’ - ஜி.கே.மணி

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் காரணமாக கட்சி இரண்டாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் தைலா புரத்தில் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடந்தது. முரளி சங்கர் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். வடி வேல் ராவணன் நீக்கப்பட்டார். “ஒரு வாரத்திற்கு முன் ராம தாஸுடன் சமாதான பேச்சு நடந்தது. ஆனால் நடந்த நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. இருவரும் உட்கார்ந்து மனம்விட்டு பேச வேண்டும்” என்று ஜி.கே.மணி கூறி யுள்ளார்.

பாமக பொதுச் செயலாளர் நீக்கம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அன்பு மணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரண மாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமை யில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  ஜூன் 15 நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கரை பாமகவின் பொதுச் செயலாளராக அறிவித்திருக்கிறார் ராம தாஸ்.

ஜவாஹிருல்லா வரவேற்பு

சென்னை: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குத லுக்கு எதிரான முதலமைச்சரின் கண்டனம் வரவேற்கத் தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார். “இந்திய மக்களின் நிலைப் பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் முதலமைச்சரின் அறிக்கை இருந்தது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்கு தலை கண்டிக்க மோடி அரசுக்கு மனமில்லை” எனவும் தெரி வித்துள்ளார்.

எஸ்.பி. அருண் திடீர் ராஜினாமா

சென்னை: ஆயுதப்படை பிரிவில் 12 ஆவது பட்டாலி யன் கமாண்டன்டாக பணியாற்றிய அருண் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார். அருண் வெளிநாட்டிற்குச் செல்வ தால் ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செய ராமுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராஜினாமா கடிதம் டிஜிபி சங்கர் ஜிவால் மூலம் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பி யாக பணிக்கு சேர்ந்த அருண் 2024 இல் எஸ்.பி. ஆனார்.

போக்சோவில் 350 ஆசிரியர்கள் கைது; 50 பேர் பணியிலிருந்து விடுவிப்பு

சென்னை, ஜூன் 15 - போக்சோ சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டு, இவர்களில் 50 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பள்ளி கல்வி  இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை, விஐடி பல்கலைக் கழகம் சார்பில் வேலூர் மாவட்ட அரசு பள்ளி  மாணவர்களின் வெற்றிக்கான சவால்கள், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் விஐடி அண்ணா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத் தில் உள்ள 8 வட்டாரங்களைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்  கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பங்கேற்று பேசுகையில், “மாணவிகளை ஆசிரியர்கள் குழந்தைகளாகப் பாவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இதுவரை  350 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது  செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள்

இராமேஸ்வரம்: இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தை  முடித்துக் கொண்டு கடலுக்குச் செல்ல தயாராக இருந்த பாம்பன், மண்டபம் மீனவர்களுக்கு, பலத்த காற்று எச்சரிக்கையால் கடலுக்கு செல்ல திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல்  பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலோரப் பகுதியில் பலத்த  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.