tamilnadu

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

ஜுன் 18 அரியலூர் மாவட்டத்தில்  மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள்

அரியலூர், ஜுன் 15-  அரியலூர் மாவட்டம் தழுதாழை மேடு, இளையபெருமாள் நல்லூர்,  குருவலப்பர், குண்டவெளி, தா.பழூர்  ஆகிய ஊராட்சிகளில் ஜுன் 18 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறுகிறது என  ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கை யில், மக்களுடன் முதல்வர் முகாம்கள் பொதுமக்களிடம் குறிப்பி டத்தக்க வரவேற்பை ஏற்படுத்தி யுள்ளதன் விளைவாக அரியலூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் மக்க ளுடன் முதல்வர் முகாம்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜுன் 18 ஆம் தேதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், தழு தாழைமேடு கிருஷ்ணா மஹாலி லும், இளையபெருமாள் ஊராட்சி மன்றம் அருகிலும், குருவாலப்பர் கோயில் மீரா திருமண மஹாலி லும், குண்டவெளி கட்டடக் குழு  திருமண மஹாலிலும், தா.பழூர் பிஓபி மஹாலிலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறு கின்றன. காலை 10 முதல் பிற்பகல் 3 மணி  வரை நடைபெறும் இம்முகாம்க ளில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் மக்கள்  பிரதிநிதிகள்  கலந்து கொள்ளவுள்ள னர். மேலும் இம்முகாமில், அனைத்துத் துறை அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த  சேவைகளை வழங்கவுள்ளனர். எனவே, பொதுமக்கள் இம்முகாம்களில், தங்கள் கோரிக் கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மக்க ளுடன் முதல்வர் முகாமில் பெறப்ப டும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரி சீலனை செய்யப்பட்டு தகுதியின்  அடிப்படையில் 30 நாள்களில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரி வித்துள்ளார்.