கேரளாவிற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சிவப்பு எச்ச ரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக் கையில்,”வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் திங்களன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கண்ட பகுதிகளில் 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டருக்கும் மேல் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என அறி வுறுத்தப்பட்டுள்ளது.