states

அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்

அவசரமாக  தரையிறங்கிய  பிரிட்டன் போர் விமானம்

பதற்றமான சூழலை எதிர்கொண்ட திருவனந்தபுரம்

கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சனிக் கிழமை அன்று இரவு 9:30 மணியளவில் பிரிட்டன் போர் விமானம், அவசர அவசர மாக தரையிறங்கியது. இதனால் திரு வனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் சுமார் 2 மணிநேரம் பதற்றமான சூழ்நிலை யை எதிர்கொண்டதாக செய்திகள் ஞாயி றன்று காலை செய்திகள் வெளியாகி யுள்ளன. என்ன நடந்தது? திருவனந்தபுரம் விமான நிலை யத்தில் சனிக்கிழமை அன்று இரவு 9:30  மணியளவில் “பிரிட்டிஷ் எப்-35” போர்  விமான வீரர்கள்,”எரிபொருள் குறைவாக  இருப்பதால் தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும்” என விமான நிலைய  அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். திருவனந்தபுரம் விமான நிலைய அதி காரிகள் அனுமதி வழங்கிய நிலையில், விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட ஜெட் போர் விமானம் தரை யிறங்கியது. அதன்பிறகு ஒன்றிய அரசி டம் அனுமதி பெற்று எரிபொருள் நிரப்பி  மீண்டும் புறப்பட்டுச் சென்றது.