கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உலக அமைதிக்கு அச்சுறுத்தல். இஸ்ரேலின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும். இஸ்ரேல் நீண்ட காலமாக ஒரு ரவுடி நாடாக அறியப்படுகிறது. இது அப்படியே இருந்து வருகிறது. இது அனைவருக்கும் தெரியும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
போர் நிறுத்தம், அமைதி மற்றும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தியா கைவிட்டுவிட்டதா? இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சரின் தொடர்ச்சியான தவறுகளை பிரதமர் மோடி சரிசெய்வாரா? ஒரு பகுதி பேரழிவு சூழலை எதிர்கொள்ளும் போது இந்தியா அமைதியாக இருந்திருக்கக் கூடாது.
திமுக எம்.பி. ஆ.ராசா
கருப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியயுள்ளது. மண்டேலா மண்ணில் மலர்ந்தது சமூக நீதி. காந்தியை கொன்ற காவிகளின் காதுகளுக்கு எட்டுமா சேதி?
சமாஜ்வாதி எம்.பி. வீரேந்திர சிங்
பழைய பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் புனே இந்திராயணி பாலம் இடிந்து விழுந்துள்ளன. எனவே, மக்கள் பயணம் செய்யும் பாலங்களில் காலாவதியான பொருட்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்.