புனே,ஜூன் 16- புனேவில் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராயானி ஆற்றின் குறுக்கே இருந்த 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் ஞாயிறன்று (நேற்று) விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 51 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
புதிய பாலம் அமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியைப் பயன்படுத்தவே இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.