tamilnadu

நடப்பு கல்வியாண்டு முதல்  பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து

நடப்பு கல்வியாண்டு முதல்  பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து

சென்னை: தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக்  கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ், “புதிய கல்விக் கொள்கை முறையில், தமிழ் மாநில  அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும்.  இனி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 11ஆம் வகுப்பில் பயிலும்  மாணவர்கள், தங்களைப் பொதுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத் தும் ஆண்டாக 11 ஆம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்”  என்றார்.