மத்திய கிழக்கில் போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து கூடுதல் எல்.பி.ஜி-யை இந்தியா இறக்குமதி செய்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருந்து எல்.பி.ஜி ஏற்றி வந்த சரக்கு கப்பல் 'பைக்ஸிஸ் பயோனியர்', இக்கப்பல், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நெதர்லாந்து துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 16,714 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்காகக் கொண்டு வந்துள்ளது.
ரஷ்யக் கப்பலான "அக்வா டைட்டன்" அதே துறைமுகத்தில் நங்கூரமிட்ட ஒரு நாளுக்குள்ளாகவே, இந்தக் கப்பலின் வருகையும் நிகழ்ந்துள்ளது. மங்களூருவில் இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி எல்.பி.ஜி சேமிப்பு வசதி அமைந்துள்ளதால், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது; இந்தச் சேமிப்பு வசதி செப்டம்பர் 2025-இல் பயன்பாட்டிற்கு வந்தது. கடல் மட்டத்திற்கு கீழே 225 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த வசதியில், 80,000 மெட்ரிக் டன் வரையிலான எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியும்.
முன்னதாக, முதலில் சீனாவிற்குச் செல்லவிருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பலான "அக்வா டைட்டன்", பின்னர் இந்தியாவிற்குத் திருப்பி விடப்பட்டது. சனிக்கிழமை மாலை மங்களூரு கடற்கரையை வந்தடைந்த அந்த கப்பல், 7.7 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை கொண்டுவந்திருந்தது.
