இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கை ஜனாதிபதி
‘அண்டை நாட்டுக்கு முன்னு ரிமை’ கொள்கை யின் கீழ் இலங்கை நாட்டிற்கு இந் தியா எரிபொருள் வழங்கி உதவி செய் துள்ளது. இந்தியாவிடமிருந்து பெற்ற மொத்தம் 38,000 மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கைக்கு சேர்ந்துள் ளது. இதில் 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோல் அடங்கும். இதுதொடர்பாக இலங்கை ஜனாதி பதி அனுர குமார திஸாநாயக்க தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் கூறுகையில், “எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் பேசினேன். இந்தியாவின் இந்தத் துரித உதவிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெளி யுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ஒருங்கிணைப்பிற்கும் எனது நன்றிகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
