சென்னை,ஜூலை 12 - சென்னை உள்ளிட்ட நகரங்க ளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவச மாக பயணம் செய்து வருகிறார் கள். அதன்பிறகு மாநகர போக்கு வரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 விழுக்காடாக இருந்தது. அது தற்போது 60 விழுக்காடாக அதிகரித்துள் ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கடந்த 1 வருடத்தில் மட்டும் 132 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் பயன் அடைந் துள்ளனர்.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தமிழ கத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ரூ.1600 கோடியை மானியமாக அளித் துள்ளது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் முன் பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப் படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர் களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை ‘பிங்க்’நிறத்தில் மாற்றியுள்ளது. இந்த பேருந்துகள் அறிமுகத்தின் மூலம் பெண்கள் குழப்பம் இன்றி தூரத்தில் இருந்தே பேருந்துகளை பார்த்து அதில் ஏறி செல்லலாம். மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த ‘பிங்க்’ நிற பேருந்துகள் அடுத்த வாரம் சில வழித்தடங்க ளில் சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. அதற்கு கிடைக் கும் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படுகிறது.